தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாகவே மார்ச் முதல் ஜூலை வரையிலான மாதங்களில் கோடை வெப்பம் அதிகரித்து காணப்படும். நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை வெப்பம் கொளுத்துகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறவே யோகின்றனர். மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொளுத்தும் வெப்பத்தினால் வெப்பம் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஷாக் நியூஸ் – முதல் நாளில் 32,674 பேர் ஆப்சென்ட்!
தற்போது ஏராளமான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி செல்ல ஆரம்பித்துவிட்டது. வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
Exams Daily Mobile App Download
மேலும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வானிலை அறிக்கையின் படி அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை பொழிவால் வெயிலின் தாக்கம் சற்று தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் மழை பெய்து வருவதால் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.