தமிழகத்தின் 3 மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம்!!
தமிழகத்தில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை அறிவிப்பு:
வெப்பச்சலனம் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி (5.8 முதல் 7.6 கிலோமீட்டர் உயரம்வரை) காரணமாக,
21.05.2021: கிருஷ்ணரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறை காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஈரோடு,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
22.05.2021 : தமிழகம், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறை காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23.05.2021: கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானியையும் நிலவும்.
TN Job “FB Group” Join Now
24.05.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலயையும் நிலவும்.
25.05.2021: தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிவயையும் நிலவும்.
சென்னையை பொறுத்தவரை,
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு 23.05.2021 முதல் 25.05.2021 வரை:
மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாவதன் காரணமாக தமிழக பகுதிகளில் தரைக்காற்று மேற்கு வட மேற்கு திசையிலிருந்து வீச வாய்ப்பிருப்பதால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும். வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இரண்டிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
21.05.2021: தென்தமிழக கடற்பகுதி, மன்னார்வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 லிருந்து 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
22.05.2021, 23.05.2021: தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .
24.05.2021: தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதி, மன்னார்வளைகுடா தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25.05.2021: தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதி, மன்னார்வளைகுடா தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும்
வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் .
குறிப்பு : தென்மேற்கு பருவ மழை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் தொடங்கியது.
மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 22.05.2021 அன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வரும் 24 ஆம் தேதி புயலாக வலுவடைந்து வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஒடிசா – மேற்குவங்க கரையை வரும் 26 ஆம் தேதி கடக்ககூடும்.