தமிழகத்தில் இன்னும் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் இன்னும் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் இன்னும் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் இன்னும் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் இன்று முதல் மே 5 தேதி வரை தெற்கு கடலோர தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியீட்டு உள்ளது.

வானிலை அறிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக நவம்பர் மாதத்தில் மழை பெய்து முடிந்துள்ள நிலையில் இப்போது கோடை காலம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தற்போது இன்று முதல் 5 ஆம் தேதி வரையிலான வானிலை நிலவரத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – 11வது தவணை குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக, இன்று மற்றும் நாளை தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும்‌. இதனால் அந்த பகுதியில் இருக்கும் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று வானிலை அறிக்கை தெரிவித்து உள்ளது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து, 03.05.2022 முதல்‌ 05.05.2022 வரையில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலையாக தமிழகத்தில்‌ அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்‌சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌ என்றும் அடுத்தாக, சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்ததிற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌.அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌. மேலும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மே 5 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!