தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான கனமழையும், ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றும் அடிக்கக் கூடும் என்ற தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.30,000 ஊக்கத்தொகை – 7வது ஊதியக்குழு அறிக்கை! இதுதான் நிபந்தனை!
மேலும், தமிழக கடலோரப்பகுதிகளான தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். இந்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வரையிலான வேகத்தில் வீசும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என தெரிவித்திருந்தது. மேலும், தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.