தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்துள்ள நிலையில் தற்போது ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதலான தகவல்கள் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கோடை காலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த கோடை வெயிலால் மக்கள் அனைவரும் மிகுந்த சோர்வுடன் காணப்படுவார்கள். ஆனால் இந்த வருடம் எந்த வருடமும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. ஏனென்றால், ஆசானி புயல் மற்றும் கோடை மழை காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் அதிகமான இடங்களில் வெயிலின் தாக்கம் மிகக் குறைவாக இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைவான கட்டணத்தில் நிறைவான வகுப்புகள்!
இதனை தொடர்ந்து தற்போது கோடை காலம் முடிந்த நிலையில், தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல அடுத்த 3 நாட்களுக்கு வானிலை இதேபோலத்தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தளவுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. நேற்று தஞ்சை, வல்லம், அதிராம்பட்டினம் பகுதிகளில் நிலையாக மழை பெய்துள்ளது. வெப்பத்தை பொறுத்த வரை மதுரை மாவட்டத்தில் 101.48 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல் சென்னையில் 37.3 திருச்சியில் 97.7 பாரன்ஹீட் வெப்பம், கடலூரில் 98.6 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது. அதாவது மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.