நீலகிரி, கோவையில் தொடரும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை:
தமிழகத்தில் கோடை காலத்தின் இறுதி பகுதி நடந்து வருகிறது. கோடையில் பல மாவட்டங்களில் வெப்ப நிலை சதத்தை எட்டியது. மக்கள் கோடை வெயிலின் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்து வந்தனர். கோடை காலத்தில் கொரோனாவின் தாக்கமும் அதிக அளவில் இருந்து வந்தது. தற்போது கோடை காலத்தின் இறுதி பகுதியில் அதற்கு மாறாக தமிழகத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.
வண்டி ஒட்டி சென்றது பாக்கியாவா என்று சந்தேகப்படும் மாமனார் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசொட்!!
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாகவும், தென்மேற்குப் பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று முன்னதாகவே வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால், கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதைப்போலவே, தற்போது நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை மேலும் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல் போன்ற 10 மாவட்டங்களில் மிதமான கனமழையும், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.