தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தின் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், அடுத்த நான்கு நாட்களுக்கும் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
வானிலை அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்வது வழக்கம் ஆகும். ஆனால் தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள சமயத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பொழிவு அதிகமாக காணப்படுகிறது. ஏனெனில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது. அத்துடன் அசானி புயல் காரணமாகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
Jio, Airtel, VI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.500க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள்!
இதனை தொடர்ந்து தற்போது இன்றைய வானிலை நிலவரம் குறித்த தகவலை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தொடர்ந்து இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை மற்றும் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது நீலகிரி, கோவை, மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை மாவட்டத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு அதிகமாவே இருக்கிறது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.