தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் வடகிழக்கு பருவக்காற்று பெய்ய தொடங்கியது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருந்தது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் ஜனவரி 14ம் தேதி வரையிலான வானிலை நிலவரத்தை பற்றிய தகவல்களை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
10.01.2022: தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
11.01.2022: டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மத்திய அரசில் 7,500+ காலிப்பணியிடங்கள் – SSC தேர்வாணையம் அறிவிப்பு!
12.01.2022: கடலோர மாவட்டங்கள் அதனை ஓட்டியுள்ள உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
13.01.2022: கடலோர மாவட்டங்கள் அதனை ஓட்டியுள்ள உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
14.01.2022: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் அதனை ஓட்டியுள்ள உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு இல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மமை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை, 50% மட்டுமே அனுமதி – முக்கிய கோரிக்கை!
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
10.01.2022, 11.01.2022: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளில் (5.8 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.