தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்‌ என்று சென்னை வானிலை அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒரு மாத காலமாக கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் பிறகு டிசம்பர் மாத தொடங்கியதில் குறைந்த மழை மீண்டும் இறுதியில் பெய்ய தொடங்கியது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

சில மாவட்டங்களில் கனமழையும் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது. தற்போது தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது.

இன்றைய வானிலை தகவல்:

08.01.2022, 09.01.2022: மேற்கு தொடர்ச்‌சி மலை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ தென்‌ கடலோர மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

10.01.2022: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

11.01.2022: தென்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

12.01.2022: தென்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கும்‌.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

08.01.2022: தெற்கு வங்க கடலின்‌ மத்‌திய பகுதிகளில்‌ இடி மழையுடன்‌ கூடிய சூறாவளி காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

09.01.2022: இலங்கைக்கு தென்‌ கிழக்கே தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ இடி மழையுடன்‌ கூடிய சூறாவளி காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.இப்பகுதிகளுக்கு செல்லும்‌ மீனவர்கள்‌ எச்சரிக்கையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!