தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகம் மற்றும் புதுவையில் பிப்ரவரி 1 முதல் 9 வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மழை குறித்த தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் தற்போது ட வாணியை மட்டுமே நிலவி வருகிறது. இருப்பினும் வளிமண்டல சுழற்சி காரணமாக சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழிவு ஏற்படுகிறது. மேலும் பனி பொழிவும் ஏற்படுகிறது . இந்த நிலையில் சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் தினசரி வானிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய வானிலை குறித்த அறிக்கையை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்து கீழ்கண்ட பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய வானிலை தகவல்,
10.02.2022: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
11.02.2022: தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.