தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

கிழக்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

தமிழகத்தில் தற்போது பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. என்னினும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் சில பகுதிகளால் இடியுடன் கூடிய மழை பெய்தது. சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய வானிலை குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

வானிலை அறிக்கை:

16.02.2022: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

பிப்.17 முதல் அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அனுமதி!

17.02.2022: தென்‌ தமிழக கடலோர மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

18.02.2022: தென்‌ தமிழக கடலோர மாவட்டங்கள்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, புதுக்கோட்டை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

19.02.2022, 20.02.2022: தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, தஞ்சாவூர்‌, இருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, புதுக்கோட்டை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

PF கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – இந்த ஆண்டு கூடுதல் வட்டி!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ லேசான பனி மூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!