தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கடுமையான மழை பெய்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இருப்பினும் ஜனவரி மாதம் முதல் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை மையம் அறிக்கை:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இருப்பினும் கடந்த 2 நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய முதல் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதன் தொடர்ந்து இன்று முதல் 15ம் தேதி வரை மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல (1.5 கிலோமீட்டர் உயரத்தில் ) சுழற்சி காரணமாக ஓரிரு மாவட்டங்களிலில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
பிப்ரவரி 27 வரை 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு உத்தரவு!
11.02.2022: தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுஇகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில்
பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
12.02.2022: தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி , திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
13.02.2022 முதல் 15.02.2022 வரை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுஇகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஹிஜாப் பிரச்சனை குறித்து கருத்து பதிவிட்ட ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி – ரசிகர்கள் விமர்சனம்!
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.
11.02.2022: மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.