தமிழகத்தில் டிச.22 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள், வெப்பநிலை எச்சரிக்கை – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் டிச.22 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள், வெப்பநிலை எச்சரிக்கை - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் டிச.22 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள், வெப்பநிலை எச்சரிக்கை - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் டிச.22 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள், வெப்பநிலை எச்சரிக்கை – வானிலை அறிக்கை!

வட கிழக்கு பருவ காற்றின்‌ காரணமாக டிசம்பர் 22ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை தகவல்:

வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒரு மாத காலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்தது. இரவு, பகலாக பெய்த தொடர் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சென்னையில் மழைநீர் தேங்க வெள்ளக்காடாய் காட்சியளித்தது. அதிக கனமழை காரணமாக தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. தினமும் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

தமிழ் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இங்கே!

18.12.2021: ராமநாதபுரம்‌ மாவட்டத்‌தில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

19.12.2021 முதல்‌ 22.12.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

வெப்பநிலை எச்சரிக்கை

18.12.2021, 19.12.2021: உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல்‌ 2 டிகிரி செல்‌சியஸ்‌ குறைவாகக்‌ காணப்படும்‌.

20.12.2021 முதல்‌ 22.12.2021: உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல்‌ 4 டிகிரி செல்‌சியஸ்‌ குறைவாகக்‌ காணப்படும்‌.

டிச.23ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ஜன.7 மீண்டும் வகுப்புகள் துவக்கம்!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்‌சயஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

18.12.2011 முதல்‌ 20.12.2021 வரை: குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. இப்பகுதிகளுக்கு செல்லும்‌ மீனவர்கள்‌ எச்சரிக்கையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

18.12.2021,19.12.2021: தென்‌ கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பூமத்‌திய ரேகை பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!