தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக அநேக இடங்களில்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அத்துடன் இன்று முதல் ஜனவரி 3ம் தேதி வரை உள்ள வானிலை நிலவரத்தை பற்றியும் தகவல்‌ தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌:

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, விழுப்புரம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

31.12.2021: கடலூர்‌, விழுப்புரம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய கடலோர மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இலேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

01.01.2022: கடலூர்‌, விழுப்புரம்‌, மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய கடலோர மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இலேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையில் நாளை 5 மணி நேரம் வாகன போக்குவரத்திற்கு தடை – காவல்துறை உத்தரவு!

02.01.2022: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இலேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

03.01.2022: தென்‌ தமிழ்நாட்டில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

30.12.2021 முதல்‌ 03.01.2022 வரை: குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

இப்பகுதிகளுக்கு செல்லும்‌ மீனவர்கள்‌ எச்சரிக்கையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!