தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.
வானிலை தகவல்
வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒரு மாத காலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமெடுத்தது. இரவு பகலாக பெய்த தொடர் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல ஏக்கர் விவசாய நிலங்களில் விளைவிக்க பயிர்களும் நீரில் மூழ்கி சேதமடைந்தது. சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள் இதோ!
இதனால் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பிறகு டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மழை படிப்படியாக குறைய ஆரம்பித்தது. தற்போது அதிக பனி பொழிந்து வருகிறது. தினதோறும் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய வானிலை நிலவரம் கீழ்கண்டவாறு.
27.12.2021, 28.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
29.12.2021, 30.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான/மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
31.12.2021: கடலோர மாவட்டங்கள் அதனை ஓட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுஇகளில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மூடுபனி எச்சரிக்கை:
27.12.2021, 28.12.2021: உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2022ம் ஆண்டு விடுமுறை பட்டியல்!
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.