தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல்:
வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த நவம்பர் மாதம் முழுவதும் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை பெய்தது. இரவு பகலாக பெய்த தொடர் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
TNPSC தேர்வு பாடத்திட்டத்தில் திருக்குறள் முழுவதும் நீக்கம் – சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி!
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை, தூத்துக்குடி, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பிறகு இந்த மாதத்தில் மழை தனிந்து தற்போது வறண்ட வானிலை காணப்படுகிறது.
இன்றைய வானிலை தகவல்:
24.12.2021 முதல் 26.12.2021 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
27.12.2021, 28.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான/மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வெப்பநிலை எச்சரிக்கை:
24.12.2021, 25.12.2021: உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாகக் காணப்படும்.
மூடுபனி எச்சரிக்கை :
24.12.2021, 25.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.