தமிழகத்தில் ஆகஸ்ட் 6 வரை ‘இந்த’ மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 02.08.2021, 03.08.2021 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலை பகுதிகள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழக அரசு அலுவலர்களுக்கு பணித்திறன் சிறப்பு பயிற்சி – முதல்வர் அறிவுறுத்தல்!
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 04.08.2021 முதல் 06.08.2021 வரை: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலை பகுதிகள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
TN Job “FB Group” Join Now
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுஇகளில் இலேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
அரபிக்கடல் பகுதிகள்:
02.08.2021 முதல் 06.08.2021வரை: தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்துலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.