தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும், இன்றைய வானிலை அறிக்கையின் படி மேலும், 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் பருவமழை காலத்தில் எதிர்பார்த்த அளவு விட கூடுதலாகவே நடப்பாண்டில் மழை பெய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியிடப்பட்டது. மேலும், கடந்த சில வாரங்களாக தென் இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதில், கேரளா மற்றும் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற அபாயங்களும் எழுந்தது. மேலும், அனைத்து அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த கனமழையால் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
இந்தியாவில் VLC மீடியா பிளேயர் தடை? நீடிக்கும் மவுனம்!
இதனால் பல அணைகளில் இருந்தும் அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், மேலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முன்னதாக கூறப்பட்டது. அதேபோல், தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளிலும் அவ்வவ்போது மழை பெய்து வருகிறது.இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், தமிழ்நாடு, புதுசேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மலை பெய்ய வாய்ப்புள்ளது. அதிலும், ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று பலத்த காற்று வீச வாய்ப்பு என்றும் குமரிக்கடல், மன்னர் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.