அடுத்த 2 மணி நேரத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் 1 அல்லது 2 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் கடுமையான மழை கொட்டி தீர்த்தது . இதனால் சாலையோரங்களில் மக்கள் மழையின் காரணமாக ஒதுங்கி நின்று அவதிப்படுகின்றனர். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை கனத்த மழை பொழிந்ததால் மக்கள் கடும் துயரத்தை சந்தித்துள்ளனர்.
நடிகை மீரா மிதுனுக்கு செப்.9 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு – உத்தரவு!
கனமழையின் காரணமாக சாலையில் வீதிகளில் மழை நீர் பெருகி ஓடியது. மேலும் நகரின் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கியும் காணப்படுகிறது. குறைந்த நேரம் மட்டுமே பெய்த கனமழையால் சாலை முழுவதும் வெள்ளமாக காட்சியளிக்கிறது. இதனை தொடர்ந்து சென்னை போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பருவ மாற்றம் காரணமாக இனி அதிக அளவில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இன்னும் 1 அல்லது 2 மணி நேரங்களில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சென்னையில் இன்று மாலை மழை பொழிந்தது தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.