தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் – புதிய துணைவேந்தர் நியமனம்!!
தமிழகத்தின் ஆளுநரான பன்வாரிலால் புரோகித் தற்போது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை நியமனம் செய்துள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்:
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்வி கல்லூரிகளின் வகுப்புகள் திறக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தக்க கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாடங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டது. தற்போது கொரோனாவின் 2வது அலை வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் பள்ளி (12ம் வகுப்பு தவிர்த்து) மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் சுமார் மூன்றாவது முறையாக தங்களது செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் எழுதுகிறார்கள் குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் மீண்டும் ஊரடங்கு? மாநகராட்சி விளக்கம்!
இதற்கு முன்பு இதன் துணைவேந்தராக பாலச்சந்திரன் திகழ்ந்து வந்த நிலையில் தற்போது புதிய துணைவேந்தராக செல்வக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார். அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு துணைவேந்தராக செல்வக்குமார் செயல்படுவார். இவர் சுமார் 32 ஆண்டுகளாக கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.