பள்ளிகள், கல்லூரிகள் திறக்க தடை தொடரும் !
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் எழுந்து உள்ளது. ஆகஸ்ட் 31 தேதியுடன் 7வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊடரங்கு முடிய உள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை:
தமிழகத்தில் நேற்று மாலை முதல்வர் அவர்கள் ஊடரங்கு தளர்வுகளை அறிவித்தார். அதில் தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு அனுமதி இல்லை எனவும், திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 21 – ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். பள்ளி கல்லுரிகளில் ஆன்லைன் மூலம் கற்கும் வழிமுறைகளை ஊக்குவிக்க வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு தகவல்:
மத்திய அரசு அன்லாக் 4.0 தளர்வுகளில் 50% ஆசிரியர்களை பள்ளிக்கு அழைக்கலாம் எனவும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் ஆசிரியர் வழிகாட்டுதல் தேவைப்பட்டால் பள்ளிக்கு செல்லலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்