TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு வயது வரம்பு அதிகரிப்பு – 5 லட்சம் பட்டதாரிகள் பாதிப்பு!
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தாலும் இனி வரும் ஆண்டுகளில் இதனால் பல லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு :
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்தது. இந்த தேர்வில் பங்கேற்க வயது வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.1 பள்ளிகள் திறப்பு – சத்துணவு வழங்க ஏற்பாடு!
40 வயதை கடந்தவர்கள் இத்தேர்வில் பங்கு பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. பொதுப்பிரிவினருக்கு 40 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 வயதும் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்த வயது கட்டுப்பாட்டிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விதிக்கப்பட்ட வயது வரம்பை நீக்க கோரி பட்டதாரி ஆசிரியர் கல்வி படித்தவர்கள் முதல்வரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆக ஆண்டுகள் உயர்த்தி பள்ளிக்கல்வித் துறை இரண்டு நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் இடமாற்றம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இந்த அறிவிப்புக்கு பட்டதாரி ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர். இந்த அறிவிப்பானது 31-12-2021 வரையே செல்லுபடியாகும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 3 முதல் 5 லட்சம் பட்டதாரிகள் பாதிக்கப்படுவார்கள் கல்வித்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான வயது வரம்பை 57 அல்லது 59 ஆக உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.