தமிழகத்தில் நாளை (அக்.15) இந்த இடங்களில் 5 மணி நேரம் தொடர் ‘மின்தடை’? Full Area List உள்ளே!

0
தமிழகத்தில் நாளை (அக்.15) இந்த இடங்களில் 5 மணி நேரம் தொடர் 'மின்தடை'? Full Area List உள்ளே!
தமிழகத்தில் நாளை (அக்.15) இந்த இடங்களில் 5 மணி நேரம் தொடர் 'மின்தடை'? Full Area List உள்ளே!
தமிழகத்தில் நாளை (அக்.15) இந்த இடங்களில் 5 மணி நேரம் தொடர் ‘மின்தடை’? Full Area List உள்ளே!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகள் அனைத்தும் மாதந்தோறும் சரி செய்ய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (அக்.15) தென்காசி பகுதிக்கு உட்பட்ட விஸ்வநாதப்பேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளை பற்றி பார்ப்போம்.

மின்தடை

தமிழகத்தில் துணை மின் நிலையத்தில் மழைக்காலங்களில் ஏராளமான பழுதுகள் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக சாலையோரங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுவது, மின் இணைப்பு கம்பிகளில் பிளவு உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதில் தடை ஏற்படும். அதனால் உடனடியாக இதனை சரி செய்யும் பணிகள் நடைபெறுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

அந்த வகையில் நாளை தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு மின்சாரம் விநியோகிக்கப்படும். அதன்படி நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என கடையநல்லூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

ஷாக் நியூஸ்.. முக்கால்வாசி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய முன்னணி நிறுவனம் – இதுதான் காரணம்!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான வடக்கு சத்திரம், தெற்கு சத்திரம், விஸ்வநாதப்பேரி, வடுகபட்டி, மேலகரிசல்குளம், ராயகிரி, தேவிபட்டணம், சிவகிரி, வழிவழிகுளம், கொத்தாடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!