தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை – 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் 17 ம் தேதி தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
தமிழகத்தில் முக்கிய விழாக்கள் பண்டிகை காலங்களில் அளிக்கப்படும் விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக கூடுதல் பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளும் விடப்படும். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைநகர் சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 4 நாட்கள் தொடர் விடுமுறை வர உள்ளது. நாளை ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பேரவையில் அமைச்சர் அறிவிப்பு!
அடுத்தாக மறுநாள் ஏப்ரல் 15 அன்று புனித வெள்ளியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 16ம் தேதி சனிக்கிழமை அன்று மட்டும் வேலை நாளாக இருந்த நிலையில் அன்றும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து இது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல வார விடுமுறை இதனையடுத்து தொடர்ந்து 4 நாட்கள் இந்த வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பேரவையில் அமைச்சர் அறிவிப்பு!
இந்த தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு மக்கள் விடுமுறைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சென்னையில் இருந்து 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதேபோல் பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வருவதற்கு வசதியாக பிற ஊர்களில் இருந்து ஏப்.17 ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.