தமிழக ஆசிரியர் பணி நியமனத்தில் ‘வரன்முறை’ செய்ய கூடாது? உயர்நீதிமன்ற விளக்கம்!

0
தமிழக ஆசிரியர் பணி நியமனத்தில் 'வரன்முறை' செய்ய கூடாது? உயர்நீதிமன்ற விளக்கம்!
தமிழக ஆசிரியர் பணி நியமனத்தில் 'வரன்முறை' செய்ய கூடாது? உயர்நீதிமன்ற விளக்கம்!
தமிழக ஆசிரியர் பணி நியமனத்தில் ‘வரன்முறை’ செய்ய கூடாது? உயர்நீதிமன்ற விளக்கம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இவர்கள் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பணி நியமனம்:

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு 2022 – 2023 ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமனம் செய்ய கோரிக்கைகள் எழுந்து வந்தது. இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறை காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்தது. அதன்படி ஆசிரியர் தேர்வாணையம் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. மேலும் தேர்வு விரைவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் உள்ள 13,331 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்காலிக பணியிடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கும், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இதற்கு மத்தியில் அரசு பள்ளிகளில் பகுதி நேர தொழில் கல்வி ஆசிரியர்களாக பணியாற்றும் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தகுதியான கல்வித்துறை அதிகாரிகளால் நியமிக்கப்படாமல் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிகளில் அனைத்து நியமனங்களும் தேர்வு விதிகளை பின்பற்றியே நடத்தப்பட வேண்டும். பின் வாசல் வழியாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை எந்த சூழ்நிலையிலும் வரன்முறைப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!