தமிழக மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். பள்ளி மாணவர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலவச திட்டம்:
தமிழக அரசானது பள்ளி மாணவர்களுக்கான தேவைகளை அறிந்து அதனை செயல்படுத்தி வருவதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் நாளுக்கு நாள் பபுதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களிடம் கல்வி கற்கும் ஆர்வத்தை மேம்படுத்துகிறது. அது மட்டுமின்றி இலவச மிதிவண்டி, இலவச பஸ் பாஸ், இலவச சீருடை போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பல ஏழை எளிய மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. நேற்றைய தினம் காமராஜரின் பிறந்த நாளையொட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படாது என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தேர்தல் அறிக்கையில் டேப் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மடிக்கணினி தான் சிறந்தது என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அரசு பள்ளிகளில் மீண்டும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பொது மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் – அமைச்சர் அறிவிப்பு!
தற்போது அரசு பள்ளிகளில் 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கூடுதலாக ஒரு தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை 149ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றதாகவும், இது குறித்து முதல்வர் அலுவலகத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் விரைவில் குணமடைந்து திரும்பிய பின்னர் இலவச மிதிவண்டி, இலவச சிற்றுண்டி திட்டத்தினை தொடக்கி வைப்பார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.