தமிழகத்தில் அதிகமான சத்து மாத்திரை சாப்பிட்டு மாணவி உயிரிழப்பு – முதல்வர் நிதியுதவி!
தமிழகத்தில் உதகை மாவட்டத்தில் இயங்கி வரும் நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவிகள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகளை சாப்பிட்டதால் ஒருவர் பலியான நிலையில், அந்த மாணவி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவி இறப்பு
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் இயங்கி வரும் உருது நடுநிலைபள்ளியில் சுமார் 200க்கு அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஊட்டச்சத்து மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாத்திரைகள் ஒரு நாளைக்கு ஒன்று என மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இனி ஒரே ஜாலிதான் .. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி இந்த மாத்திரைகள் அதிக அளவில் மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. அப்போது யார் அதிகமான மாத்திரை சாப்பிடுவது என மாணவ மாணவிகளுக்கு இடையே போட்டி நடந்தது. அதில் அதிகமான மாத்திரை எடுத்துக் கொண்ட 6 ஆம் வகுப்பு மாணவர், 7 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது.அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மாணவிகளின் உடல் மோசமானது, அதனால் அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதில் ஒரு மாணவி உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால், அவரை சென்னைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியில் மாணவி பலியானார். இந்நிலையில் அந்த மாணவி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்போது சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.