தமிழக பள்ளிகளில் பணிமாறுதல் கலந்தாய்வு – ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம்!
தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையில் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் வழங்கும் கலந்தாய்வு வருகிற ஜூலை 7 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர்களின் நலன் சார்ந்த நியாயமான கோரிக்கைகள் மற்றும் தொடக்கக்கல்வி பணிவரன்முறை செய்ய வேண்டும் என கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் முதன் முதலில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும் என செயல்முறை ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த காலங்களில் மாவட்ட மாறுதலில் கடைப்பிடிக்கப்பட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது. இதற்கு முன்பு தொடக்கக்கல்வித்துறையில் நடைபெற்ற மாவட்ட மாறுதல் கலந்தாய்வுகளில் கடைசியாக பணியாற்றும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் தான் முன்னுரிமை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது முதன் முதலில் பணியில் சேர்ந்த ஒரே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
தமிழக பள்ளி & கல்லூரிகளில் 10,371 ஆசிரியர் பணியிடங்கள் – அரசின் முக்கிய முடிவு!
எனவே கடந்த பல கலந்தாய்வுகளில் கடைபிடிக்கப்பட்டது போல் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி மாவட்ட மாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும். மேலும் மாவட்ட கலந்தாய்வில் ஏற்படும் காலிப்பணியிடங்களை காண்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 2010 ஆம் ஆண்டு TRP மூலம் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்யப்பட்ட உத்தரவு வழங்கப்படாமல் உள்ளதால் 2 ஆண்டுகளாக தேர்வு நிலை பெற இயலாமல் உள்ளனர். எனவே ஆசிரியர்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.