தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடல் – மருத்துவர்கள் சங்கம் முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் இயல்பு நிலைக்கு தற்போது திரும்பியுள்ளனர். அதனை தொடர்ந்து அதிகரித்து வரும் ஓமைக்ரான் காரணமாக பள்ளி, கல்லூரிகளை மீண்டு மூட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள் மூடல்
தமிழகத்தில் கொரோனா காரணமாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை என அனைவருக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. தற்போது தான் இயல்பு நிலைக்கு மாணவர்கள் திரும்பினர்.
TN TRB 2207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்கள் சங்கம் கோரிக்கை!
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் தமிழகத்திலும் பரவ தொடங்கி உள்ளது. அதனால் ஓமைக்ரான் பரவல் காரணமாக தமிழக அரசு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. ஓமைக்ரான் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் கடிதம் மூலமாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பொது மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிவதை அரசு கண்காணிக்க வேண்டும்.
டிச.26 முதல் இரவு ஊரடங்கு அமல், புத்தாண்டு கொண்டாட அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
அத்துடன் மருத்துவர்கள், மருத்துவ துறை ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் போன்றவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்க வேண்டும். அதோடு 2ம் அலையில் பயன்படுத்தப்பட்ட மருத்துவமனைகள் , கோவிட் Care center-களில் பயன்படுத்தப்படும் மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் தேவையான பாதுகாப்பு பொருட்களை அதிக அளவில் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை மருத்துவர் சங்கங்கள் அரசிடம் முன் வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை மக்கள் நலன் கருதி உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.