தமிழக பள்ளிகள் & கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – கனமழை எதிரொலி!
தமிழகம் முழுவதும் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று (ஜூலை 15) நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
கடந்த ஒரு சில மாதங்களாக நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் பருவமழையானது பல்வேறு மாநிலங்களில் ஏகப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த ஒரு சில வாரமாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது மாநிலம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (ஜூலை 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதாவது, நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், ‘நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை (ஜூலை 15) விடுமுறை அறிவிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் மாதிரி வினாத்தாள்!
இப்போது நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை வலுத்து வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த கனமழையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு தற்போது ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.