தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு – புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு - புதிய விதிமுறைகள் அறிவிப்பு!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு - புதிய விதிமுறைகள் அறிவிப்பு!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு – புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பணி நிரவல், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 7ஆம் தேதி தொடங்க உள்ளது. இது தொடர்பாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விதிமுறைகள் அறிவிப்பு:

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் வழங்கும் கலந்தாய்வு வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட இடமாறுதலுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Exams Daily Mobile App Download

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான இடமாறுதல் கவுன்சிலிங், வரும் ஜூலை 7 மற்றும் ஜூலை 8ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. இதற்கான விதிமுறைகளை, முதன்மை கல்வி அலுவலர்கள் பின்பற்ற வேண்டும். ஏற்கனவே ‘ஆன்லைன்’ வழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். மேலும் ஒன்றிய கவுன்சிலிங்கில் விருப்ப மாறுதல் பெற்றவர்களுக்கு, மாவட்ட மாறுதலில் பங்கேற்க அனுமதி இல்லை.

தமிழக மாணவர்களுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் – முக்கிய அறிவிப்பு!

இதையடுத்து உபரி ஆசிரியர்களாக இருந்து பணி நிரவலில் மாற்றப்பட்டவர்கள் மற்றும் LKG வகுப்புகளில் இருந்து மாற்றப்பட்ட ஆசிரியர்கள், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். மேலும் வரும், ஜூலை 5ம் தேதி இறுதி செய்யப்பட்ட முன்னுரிமை பட்டியலின்படி மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அலகு விட்டு மாறுதலில் சென்றவர்கள், இந்த கவுன்சிலிங்கில் இடம் பெறக் கூடாது. மேலும் மலைப் பகுதிக்கு மாறுதல் பெற்றவர்கள், தற்போது இடமாறுதலுக்கு தேர்வு செய்யும் இடத்தில், ஓராண்டு மலைப் பணியை முடித்த பிறகே சேர முடியும். அதுவரை, அந்த இடம் காலியிடமாக வைக்கப்படும். குறிப்பாக, காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை மட்டுமே கவுன்சிலிங் நடக்கும். முதல் நாள் முடிவடையாத கவுன்சிலிங், மறுநாள் காலை 9:00 மணிக்கு துவங்கும் என கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!