தமிழக பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் அனைத்து ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வந்த காரணத்தால் பள்ளிகள் திறக்கப்படவில்லை ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டம் – காங்கிரஸ் எம்.பி அறிக்கை!!
மேலும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள 11 மாவட்டங்களில் பள்ளிகள் திறக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் பள்ளிகளில் 2021-22 ஆம் ஆண்டுகான 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விபரங்களை கல்வி மேலாண்மை தாக்கல் முறைமை இணையதளத்தில் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள், சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.