தமிழக பள்ளி மாணவ-மாணவிகள் கவனத்திற்கு – இலவச சைக்கிள் வழங்கும் பணி தீவிரம்!
தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டி மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்குச் செல்லவும், எதையும் தவறவிடாமல் பாடங்களை படிக்கவும் உதவும். மேலும், மாணவர்கள் போக்குவரத்து கட்டணம் பற்றி கவலைப்படாமல் தினமும் பள்ளிக்கு சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படவுள்ளது.
இலவச சைக்கிள்:
தமிழகத்தில் ஏழை மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கு எளிதில் சென்று வர இலவசமாக சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசால் தொடங்கப்பட்ட இலவச சைக்கிள் திட்டத்தில் பல நன்மைகள் உள்ளன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் முக்கிய நன்மைகளில் ஒன்று, மாணவர்கள் பள்ளிக்கு சரியான நேரத்தில் சென்று சேர முடியும் என்பதாகும். அதன்படி அரசு பள்ளி, ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சைக்கிள் பெற்று வருகின்றனர். இருப்பினும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஆண்டு பிளஸ் 1 படித்த மாணவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
Exams Daily Mobile App Download
தற்போது, அம்மாணவர்கள் பிளஸ் 2 படித்து வரும் நிலையில் அவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு சைக்கிள் வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் மாணவ -மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. மேலும் மாணவர்கள் குறித்த பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கு சைக்கிள்கள் கொள்முதல் செய்யும் பணியும் நடந்தது. தற்போது அந்த சைக்கிள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பயணிகளுக்கான முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு – அழைப்புகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தல்!
அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் தற்போது 84 அரசு மற்றும் அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் 6 ஆயிரத்து 348 மாணவர்கள், 7 ஆயிரத்து 147 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 495 பேருக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படவுள்ளது. இதற்காக, தனியார் மிதிவண்டி நிறுவனம் சார்பில் பள்ளிகளுக்கு மிதிவண்டிகளை சரிபார்த்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, பச்சை வண்ணத்தில் வழங்கப்பட்ட மிதிவண்டி இந்த ஆண்டு நீல வண்ணத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல், நடப்பு கல்வியாண்டில் மிதிவண்டி வழங்குவதற்காக பிளஸ் 1 படித்து வரும் மாணவர்களின் பட்டியல் சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.