தமிழக பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் கடந்த வாரம் முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து அவர் படித்த சக்தி மெட்ரிக் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. இந்நிலையில் அதில் படித்து வந்த மாணவ மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் அதிகம் பகிரப்பட்ட செய்தியாக கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதியின் தற்கொலை செய்தி இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி பள்ளி விடுதியின் 3 வது மாடியில் இருந்து மாணவி விழுந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினார்கள். இன்னும் மாணவியின் இறப்பிற்கு சரியான காரணம் தெரியவில்லை.
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – இதை தெரிந்து கொள்வது கட்டாயம்!
இந்நிலையில் ஜூலை 17 ஆம் தேதி மாணவி இறப்பிற்கு நீதி வேண்டும் என மாணவியின் ஆதரவாளர்கள் சக்தி மெட்ரிக் பள்ளியை அடித்து நொறுக்கி தீயிட்டனர். அதில் பள்ளி வளாகம் முழுவதும் தீக்கரையானது. அதனை தொடர்ந்து பள்ளி வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அதனால் அங்கே 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இந்நிலையில் அந்த மாணவ மாணவிகளின் கல்விக்கு உத்தரவாதம் கொடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி அளித்தார்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தற்போது கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தை சீர் செய்து விட்டு மீண்டும் வழக்கம் போல பள்ளி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில மாணவியின் மரணத்திற்கு நீதி வழங்குவதற்கு முன்னதாக இந்த பள்ளி திறக்கப்படுவதை எதிர்த்து வருகின்றனர். ஆனால் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.