தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை!

0
தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை!
தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை!
தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை!

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் கூட்டமாக சேர்ந்து வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை எச்சரிக்கை:

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு 2022 – 2023 ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு மாணவர்களுக்கு நற்குணத்தை போதிக்கும் வகையில் போதனை வகுப்புகளும் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வியை தாண்டி நல்லொழுக்கத்தை கற்பிக்க வேண்டியதும் அவசியம். இதனை கருத்தில் கொண்டும் அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் வரும் 24ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதாவது கல்லூரி, பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டாலோ, பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் நடந்து கொண்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. அண்மையில் சென்னை கீழ்பாக்கம் பகுதியில் நேற்று கல்லூரி மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாடியதாக தகவல் வந்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள் மாணவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து சென்னையில் கல்லூரி 2ம் மற்றும் 3ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சாலையில் திரளாக சென்றனர்.

 

Exams Daily Mobile App Download

அப்போது காவல் அதிகாரிகள் மாணவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். உடனே மாணவர்கள் கலைந்து சென்றதால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மேலும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை கல்லூரிக்கு வெளியே காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டும், காவல் ஆளுநர்கள் பணியமர்த்தப்பட்டும் கண்காணித்து வருகின்றனர். அத்துடன் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் சென்னை காவல்துறை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!