தமிழக ஊரக திறனாய்வு தேர்வு டிச.17 க்கு தள்ளிவைப்பு – மாண்டஸ் புயல் நெருங்கும் அபாயம்!
தமிழகத்தில் மாண்டஸ் புயல் உருவெடுத்துள்ளதன் காரணமாக டிசம்பர் 10ம் தேதி நடக்க இருந்த ஊரக திறனாய்வு தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தேர்வு தள்ளிவைப்பு:
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது மாண்டஸ் புயலாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழ்கத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புயலானது அந்தமான் மற்றும் வட தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் கரையை கடக்க உள்ளது.
தமிழகத்தில் 23 கல்லூரிகளில் அவசர மருத்துவ பட்ட மேற்படிப்பு – வருங்காலத்தில் கட்டாயமாக்க திட்டம்!
Exams Daily Mobile App Download
இதனால் இன்று முதல் அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 10ம் தேதி நடக்க இருந்தது. தற்போது கனமழை அறிவிப்பு காரணமாக இந்த தேர்வு டிசம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.