தமிழக ரேஷன் கடைகளில் இனி தரமான அரிசி – அமைச்சர் பெரியசாமி தகவல்!

0
தமிழக ரேஷன் கடைகளில் இனி தரமான அரிசி - அமைச்சர் பெரியசாமி தகவல்!
தமிழக ரேஷன் கடைகளில் இனி தரமான அரிசி - அமைச்சர் பெரியசாமி தகவல்!
தமிழக ரேஷன் கடைகளில் இனி தரமான அரிசி – அமைச்சர் பெரியசாமி தகவல்!

தமிழக ரேஷன் கடைகளில், தரம் குறைந்த அரிசிகளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதாக, தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து முக்கிய விளக்கத்தை அமைச்சர் பெரியசாமி கொடுத்துள்ளார்.

அமைச்சர் பெரியசாமி தகவல்:

மாநில வாரியாக ரேஷன் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக மலிவு விலையில் உணவு தானியங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் உதவியும் இதன் மூலம் கிடைக்கிறது. மேலும் தகுதியுள்ளவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு அதன் மூலம் உதவி வழங்கப்படுகிறது. இதையடுத்து கொரோனா காலத்திற்குப் பிறகு, அரசாங்கம் மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கத் தொடங்கியது. இதற்கு மத்திய அரசால் பிஎம் கரிப் கல்யாண் யோஜனா என்று பெயரிடப்பட்டது. இந்த திட்டத்தின் பலனைப் பெற, நீங்கள் ரேஷன் வைத்திருப்பது கட்டாயமாகும். மேலும் ஆதார் அட்டை மூலமாகவும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார். அதாவது மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியது, கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு தெளிவான பழைய முறையை கடைபிடிக்காமல் புதிய வழிமுறைகளை உருவாக்கி வருகிறது. தமிழக அரசு பொதுமக்களுக்கு நல்ல அரிசி வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதன் அடிப்படையில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது. மேலும் பகுதி நேர கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு எம்.எல்.ஏ., நிதி மூலம் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. மேலும்,

இந்தியாவில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுகள்- அரசு அறிவிப்பு

  • ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிராமங்களில் 150 கார்டுகளுக்கு தனியாக பகுதி நேர கடை அமைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
  • கடந்த 10 ஆண்டு இருந்த போதை பொருள் விற்பனை புழக்கத்தை ஒரே ஆண்டில் தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தி உள்ளது.
  • போதை பொருள் விற்பனை செய்தவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 1500 வழக்குகள் போடப்பட்டுள்ளது.
  • போதை தடுப்பிற்கு பள்ளி, கல்லூரிகளில் உறுதிமொழி ஏற்க உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!