தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமல் – செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கம்!

0
தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமல் - செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கம்!
தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமல் - செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கம்!
தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமல் – செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கம்!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அவ்வப்போது பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார்.

ரேஷன் கடை

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் அரிசி, கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் வழங்கப்பட்டது. மேலும் தற்போது பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அவ்வப்போது ரேஷன் கடைகளில் பல்வேறு வகையான திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் ரேஷன் கடைகளில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

இது போன்று பல்வேறு வகையான திட்டங்களை கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடந்த மாதத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் சீரமைக்கப்பட வேண்டும். அடுத்த 3 மாதங்களில் ஓரளவு இப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் ரேஷன் பொருட்களை மக்கள் தாமாக முன் வந்து வாங்க வைக்க விளம்பரத்தை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ரேஷன் கடைகளில் மற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நாளை (ஆக. 30) ‘இந்த’ ஏரியாக்களில் மின் விநியோகம் இருக்காது – மின்வாரியம் அறிவிப்பு!

அதன் தொடர்ச்சியாக ரேஷன் கடைகளில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இதில் பாழடைந்த நிலையில் தூசி படிந்துள்ள ரேஷன் கடைகளை கலர்புல்லாக மாற்றும் விதமாக “நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி ரேஷன் கடைகளுக்கு கலர் கலர் பெயிண்ட் அடிப்பது, தூய்மை பணிகள் செய்வது உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ள தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் செயல்பட வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!