தமிழக ரேஷன் கடைகளில் ரூ.10க்கு 24 மளிகை பொருள்கள் – அரசு நடவடிக்கை!
தமிழக மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் கூடுதலாக ரூ. 10க்கு 24 மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் மொத்தம் 35,323 ரேஷன் கடைகள் மூலமாக 2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருப்பதால் கை ரேகை மூலமாக நாட்டில் எங்கே இருந்தும் பொருள்கள் வாங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மட்டுமில்லாமல் சோப்பு உள்ளிட்ட சில மளிகை பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை பொதுமக்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என வலியுறுத்தக் கூடாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ரேஷன் கடைகளை பல்பொருள் அங்காடிகளைப்போல, அனைத்துப் பொருட்களும் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. இனி இ-பாஸ்புக் அறிமுகம் – வெளியான தகவல்!
அதன் படி தலா ரூ.10 விலையில், 24 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய பாக்கெட் விற்பனையை அமைச்சர் பெரியசாமி தொடங்கிவைத்தார். மேலும் அவர் ரேஷன் கடைகளில் 2 கிலோ, 5 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர்கள் விற்பனையையும் தொடங்கி வைத்தார். மேலும் இந்த அறிவிப்பு குறித்து உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், அரசின் உணவுத் துறை மூலமாக கூட்டுறவு மொத்த அங்காடிகள், சுயசேவை பல்பொருள் அங்காடிகளில் தரமான பொருள்களை விற்பனை செய்கிறோம்.
ரேஷன் கடைகளில் பனை வெல்லம் மற்றும் அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன் படி தலா ரூ.10 மதிப்பிலான, 24 மளிகைப் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்கிறோம். ஆனால் இந்த பொருள்களை கட்டாயம் வாங்க சொல்லி பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.