தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – அமைச்சர் ஹாப்பி நியூஸ்!
அரசு ஊழியர்களை போல நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் அகவிலைப்படி கண்டிப்பாக உயர்த்தப்படும் என, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அகவிலைப்படி:
தமிழகத்தில் கடந்த 2021 ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் சம்பள உயர்வு போன்ற வாக்குறுதிகளை அளித்தார். அதன்படி இவர் ஆட்சிக்கு வந்தவுடன் அகவிலைப்படி 2022ம் ஆண்டு முதல் உயர்த்தப்படும் என்று மானிய கோரிக்கை விவாதத்தின் போது தெரிவித்தார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதாவது அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போல ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது ரேஷன் கடை ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
கொரோனா நெருக்கடி காலத்திலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்ப்பதில் ரேஷன் கடை ஊழியர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இவர்களுக்கு அகவிலைப்படி அளிப்பது அவசியமாகும். இது குறித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் அரசு ஊழியர்களை போல நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தபடும் என்று தெரிவித்துள்ளார்.