தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு – அமைச்சரின் முக்கிய எச்சரிக்கை!

0
தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு - அமைச்சரின் முக்கிய எச்சரிக்கை!
தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு - அமைச்சரின் முக்கிய எச்சரிக்கை!
தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு – அமைச்சரின் முக்கிய எச்சரிக்கை!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மலிவான விலையில் உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் சோப்பு, மாவு உள்ளிட்ட பொருட்களை கட்டாயமாக வாங்க வேண்டும் என்று கூறுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பாக முக்கிய எச்சரிக்கை ஒன்றை அமைச்சர் பெரியசாமி அவர்கள் விடுத்துள்ளார்.

ரேஷன் கடை

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அன்றாட உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவு பொருட்கள் மலிவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் இலவச அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ரேஷன்தாரர்கள் பொருட்கள் வாங்க வரும்போது கூடுதலாக சோப்பு, அரிசி மாவு உள்ளிட்ட பொருட்களை கட்டாயமாக வாங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் வலியுறுத்துவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தொடர் விடுமுறைக்கான ஏற்பாடுகள் தீவிரம் – மக்களுக்கு அரசு செய்துள்ள தரமான சம்பவம்!

அத்துடன் கூடுதலான பொருட்களை வாங்கினால் தான் மற்ற ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும் மிரட்டுவதாகவும் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்துள்ளது. இது போன்று திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் ஏராளமான கடைகளில் நடைபெறுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு கூட்டுறவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் புதிய ரேசன் கடை ஒன்றை திறந்து வைத்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இந்த புதிய ரேஷன் கடை திறந்ததை தொடர்ந்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இதனை தொடர்ந்து இவர் கூறியிருப்பதாவது, ரேஷன் கடைகளில் கூடுதலாக சோப்பு, அரிசி மாவு உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கார்டுதாரர்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என கூறியுள்ளார். மேலும் இதனை மீறி செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக பொது மக்கள் எப்போது வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!