தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – நாளை குறைதீர்ப்பு முகாம்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலம் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் முக்கிய ஆவணமாக விளங்கும் ரேஷன் அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு வாய்ப்பளித்துள்ளது. இதனை பயன்படுத்தி ரேஷன் அட்டைதாரர்கள் வேண்டிய அப்டேட்டுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஊரடங்கு மாதங்களில் அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணங்களை பெற்று மக்கள் பயனடைந்தனர். இந்த குடும்ப அட்டை குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்து ரேஷன் அட்டைகளின் தரநிலை 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது ரேஷன் கார்டு அனைத்து வேலைகளுக்கு அவசியமாகிறது. மேலும் இருப்பிட சான்றாகவும் கருத்தில் கொள்ளப்படுகிறது. அதனால் நாம் ரேஷன் கார்டை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதாவது மொபைல் எண், புதிய குடும்பத்தில் வந்தவர்களின் பெயர்கள், நீக்கம் செய்யப்பட வேண்டிய பெயர்கள் போன்றவற்றை சரியாக உடனே செய்யப்பட வேண்டும். இது போன்ற திருத்தங்களை மேற்கொள்ள மாதந்தோறும் விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (ஜூலை 9) சென்னையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைப்பு? மத்திய அரசு விளக்கம்!
இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் அங்கீகார சான்று பெறலாம். விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைப் பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.