தமிழகம், புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை 94% அதிகம் – அதிகாரி தகவல்!
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வந்த நிலையில் இந்த ஆண்டும் ஒப்பீடு அளவைவிட மூன்று ஆண்டுகளை அதிகமான அளவில் மழை பெய்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் பல இடங்களில் மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை 94% அதிகம்:
தமிழகம் மற்றும் புதுவையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்திய பகுதியில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற சேசோன் பகுதி நிலவுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த பகுதி அடுத்து வரும் தினங்களில் வடக்கு நோக்கி நகர கூடும் என்றார். மேலும் தென்மேற்கு பருவ மழையை பொருத்தவரையில் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் நேற்று வரையான காலக்கட்டத்தில் தமிழகம், புதுவையில் 242 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இந்த கால கட்டத்தில் இயல்பான மழை அளவு 125 மி.மீ ஆகும். இயல்பான மழையின் அளவை விட 94 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாகவே பெய்து வருகிறது. இந்த ஆண்டும் அதிக அளவில் மழை பெய்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்ட மாற்றம் – பள்ளிகல்வி ஆணையர் சுற்றறிக்கை
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது 10 இடங்களில் கனமழையும் நான்கு இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சின்ன கல்லாரில் 13 cm மழை பதிவாகியுள்ளது என்ற அவர், வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் என்றார். மேலும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 தேதிகளில் ஒரு சில இடங்களில் அதிகமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.