தமிழகத்தில் இன்று முதல் ரூ.4000 நிதியுதவி வழங்கல் – அரசு உத்தரவு!

0
தமிழகத்தில் இன்று முதல் ரூ.4000 நிதியுதவி வழங்கல் - அரசு உத்தரவு!
தமிழகத்தில் இன்று முதல் ரூ.4000 நிதியுதவி வழங்கல் - அரசு உத்தரவு!
தமிழகத்தில் இன்று முதல் ரூ.4000 நிதியுதவி வழங்கல் – அரசு உத்தரவு!

தமிழகத்தில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு இன்று முதல் நிதிஉதவி மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வழிபாட்டு தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்ட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

ஊரடங்கினால் கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு மாதச் சம்பளம் இல்லாமல் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தரப்பில் இருந்து அரசு நிவாரணம் முதல்வருக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் முக ஸ்டாலின் திருக்கோயிலில் பணிபுரியும் மாதச்சம்பளம் அற்ற ஊழியர்களின் நலனிற்காக ஒவ்வொருவருக்கும், ரூ.4,000 நிதி உதவியும், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்களும் வழங்குவதற்கு ஆணையிட்டுள்ளார்.

ஜூன் 20ம் தேதிக்குள் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி – முதன்மை கல்வி அலுவலர்!!

முதல்வர் அறிவித்த திருக்கோயில் பணியார்களுக்கான நிதிஉதவி இன்று முதல் வழங்கப்பட உள்ளது. இன்று 7,245 ஊழியர்களுக்கும், ஜூன் 7ம் தேதி 5,817 பெருகும் தலா ரூ.4,000 நிதிஉதவி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் மாதச் சம்பளம் அற்ற திருக் கோயில் பணியாளர்கள் மிகவும் பயனடைவார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!