தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து காரைக்குடி கோட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இளைஞர்கள் பல்வேறு வேலைவாய்ப்புகளை இழந்தனர். தற்போது தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி காரைக்குடி கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு நேரடி முகவர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக காரைக்குடி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பி. ஹுசைன் அகமது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை – வெளியாகும் சூப்பர் அறிவிப்பு!
இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இதற்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இதில் வேலை தேடிக்கொண்டிருப்பவா்கள், சுயதொழில் செய்பவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினா், மகளிர் மேம்பாட்டு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அலுவலர்கள் என் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இப்பணியில் நியமிக்கப்படுவோருக்கு அவர்கள் செய்யும் வணிகத்தை பொறுத்து ஊக்கத்தொகை மட்டும் வழங்கப்படுகிறது.
PF கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – இந்த ஆண்டு கூடுதல் வட்டி!
மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூ.5000 தொகையை எஎஸ்சி அல்லது கேவிபி பத்திரத்தை இந்திய ஜனாதிபதிக்கு ஈடு செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த தொகை அவரின் உரிமைக்காலம் முடியும் போது திரும்ப கொடுக்கப்படும். இப்பணிக்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பெற்று கொள்ளலாம். அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் பான் அட்டை, ஆதார் அட்டை, முகவரி சான்று, கல்வி சான்று உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இதனை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், காரைக்குடி கோட்டம், காரைக்குடி – 630003 என்ற முகவரிக்கு பிப்ரவரி 22ம் தேதிக்குள் பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபால் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 04565 224548 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.