தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முழுக்கரும்பு வழங்கல்! விவசாயிகள் கோரிக்கை!
தமிழகத்தில் 2022 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கரும்பு விளைந்து அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பரிசுக்காக நல்ல விலையில் கொள்முதல் செய்ய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொங்கல் கரும்பு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான தை முதல் நாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். பொங்கல் என்றாலே தித்திக்கும் கரும்பு நம் நினைவிற்கு வரும். பண்டிகை தினத்தன்று புது பானையில் பொங்கலிட்டு மஞ்சள், கரும்பு உள்ளிட்டவைகளை வைத்து ஆதவனுக்கும், இறைவனுக்கும் படைத்து வழிபடுவர். பொங்கல் பண்டிகைகாக விவசாயிகள் 11 மாதங்களுக்கு முன்பே கரும்பு பயிரிட தொடங்குவர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் போதிய மழையால் தற்போது கரும்புகள் அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருக்கின்றன.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஊதிய உயர்வு!
இந்த திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விளையும் கரும்புக்கு தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இப்பாதையில் நல்ல மண் வளம், காவிரி தண்ணீர் மற்றும் பாரம்பரிய விவசாயிகள் மூலம் வேளாண் உத்திகளை கொண்டு கரும்பு விளைவிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருந்ததால் கரும்பு நன்கு வளர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கருப்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 முதல் 7ம் வகுப்புகளுக்கு டிச.14 வரை பள்ளிகள் திறப்பு கிடையாது – மாநகராட்சி அறிவிப்பு!
மேலும் வெளிமாவட்ட கரும்பு வியாபாரிகள் இனிமேல் தான் திருக்காட்டுப்பள்ளி கொள்முதலுக்காக வர தொடங்குவார்கள் என்று அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். அதனை தொடர்ந்து இப்பகுதியில் விளைந்துள்ள கரும்புகளை தமிழக அரசு கட்டுப்படியான விலையில் கொள்முதல் செய்து பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்றைய நிலவரப்படி ஒரு கரும்பு சில்லறை விற்பனையில் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.