ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழக போலீசாரை ஈடுபடுத்தக் கூடாது – EPS வலியுறுத்தல்!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு போலீசார் ஈடுபடக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் 9 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் கொரோனா காலம் என்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அதிமுக சார்பில் 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விருப்ப மனு தாக்கலும் தொடங்கியது. இந்நிலையில் மாநில காவல்துறையினர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படலாம். ஆகவே, உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் மாநில போலீசை ஈடுபடுத்தக் கூடாது. சிஆர்பிஎஃப் அல்லது சிஐஎஸ்எஃப் போலீஸை ஈடுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
கோவையில் செப்.16ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
உள்ளாட்சி தேர்தலானது சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என அவர் கூறியுள்ளார். எனவே வாக்குப்பதிவு மையங்களில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் வாக்குப்பதிவு செலுத்திய பின்னர் வாக்குகள் எண்ணப்படும் வரை வாக்குச்சீட்டுகள் பாதுகாப்புக்கு CISF வீரர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.