தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு !

0
தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு தேர்வு தேதி தேர்வு அறிவிப்பு !
தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு தேர்வு தேதி தேர்வு அறிவிப்பு !

தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு

தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கான தேர்வு தேதியை அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தேர்வு எழுதாத 34,482 மாணவர்களுக்குள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த 718 +2 மாணவர்களுக்கான தேர்வு வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதிய நுழைவுச்சீட்டு:

வருகிற 13ந்தேதி முதல் 17ந்தேதி வரை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களின் நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பள்ளிகளிலும் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு மையங்கள்:

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுத நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் தேர்வர்கள் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மேலும் மாணவர்களுக்கு தங்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடித்த பின்னர், 4 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!