தமிழக மக்களே உஷார் – அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கிறது. மேலும் கடந்த மாதம் அக்னி நட்சத்திரம் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. அத்துடன் தற்போது அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்கிறது.
விஜய் டிவி ‘பாரதிதாசன் காலனி’ சீரியலின் குமரகுரு & ராதா குடும்பம் அறிமுகம் – ப்ரோமோ ரிலீஸ்!
அதன் தொடர்ச்சியாக கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், பொன்னமராவதி, திருமங்கலம், கோத்தகிரி, மதுரை, அறந்தாங்கி, உதகமண்டலம் பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. மேலும் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்னும் 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இதில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.