தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை 1500 ரூபாயாக உயர்வு? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகையை ரூபாய் 1500 ஆக உயர்த்துவதாக வாக்களித்த, திமுக கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் தற்போது ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க உள்ளதா? இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் கண்டனம்:
தமிழகத்தில், ” முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காக பல நிபந்தனைகளின் மூலம் ஏழை, எளிய முதியோரின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை கைவிட வேண்டும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் தேர்தல் அறிக்கையில், ‘முதியோர் நலன்’ என்ற தலைப்பின் கீழ் ‘தகுதியுள்ள முதியோர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் வழங்கப்படும் 1000 ரூபாய் உதவித்தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கோபி நிஜத்தில் யார் தெரியுமா? ரசிகர்கள் அறியாத பல தகவல்கள்!
இந்நிலையில், தி.மு.க கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் முதியோர் உதவித்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துவது குறித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையில் முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான நடவடிக்கையினை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தற்போது ஓய்வூதியம் பெறும் முதியோரில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் பெற்று இருந்தாலோ, மகன் அல்லது மகள் வீட்டில் வசித்தாலோ, சொந்த வீடு இருந்தாலோ முதியோர் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கைகளில், ‘அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன்’ என்று சொல்லிவிட்டு, தேர்தல் முடிந்த பிறகு சில அறிக்கைகளை நிறைவேற்றப்படாமல் இருப்பது சரியான செயல் இல்லை. எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பல நிபந்தனைகளின் மூலம் ஏழை, எளிய முதியோரின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதைக் கைவிடவும், தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.